முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 8, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திரும்பிவராத மின்மினிகள்

கோதண்டபாணி ஆடியோ லேப்ஸ் சென்னையின் மிகப்பெரிய, புகழ்பெற்ற ஒலிப்பதிவுகூடம். பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்குச் சொந்தமானது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையிசை ஒலிப்பதிவு மையங்களில் ஒன்றாக விளங்கிய இடம். தற்போது அது விற்பனைக்கு வந்துள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த செய்தியை முதலில் என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் அது உண்மையே என்று திரையிசைத் துறை நண்பர்கள் பலர் உறுதியாகச் சொன்னார்கள். கடுமையான பொருளதார நெருக்கடியால்தான் எஸ்.பி. பி இந்த முடிவை எடுத்துள்ளாராம். 45 ஆண்டுகளாக இடைவிடாமல் பல மொழிகளில் தொடர்ந்து பாடிவரும் ஒரு மாபெரும் நட்சத்திரப் பாடகனுக்கா இந்த நிலை என்று யோசிப்பது சங்கடமாக இருந்தது. பணத்தின் நிலையற்ற தன்மையும் வாழ்வின் சுழற்சியும் எவ்வளவு விசித்திரமானது. திரை இசைத்துறையில் பெரும்புகழடைந்த பலரையும் நான் முதலில் சந்தித்த இடம் அந்த கோதண்டபாணி ஒலிப்பதிவுக்கூடம்தான். பிரபல பின்னணிப் பாடகி மின்மினி அவர்களில் ஒருவர். ஒரே ஒரு பாடலின் வாயிலாக ஏ.ஆர் ரஹ்மானுக்கு இணையான தேசியப் புகழைப் பெற்ற அந்தப் பாடகிக்கு பின்னர் என்னவாயிற்று என்றோ, அவர் எங்கே போனார் என்றோ யோசிப்பவர்கள் இன்