முள்ளரும்பு மரங்கள் – 4 ஓவியங்கள் : ரவி பேலெட் மயிலாடும்பாறை ஊரில் ஒரு பெரிய இசை நிகழ்ச்சி . அதில் தமிழ் பாடல்களைப் பாட என்னை அழைத்திருந்தார்கள் . தமிழ் , ஹிந்தித் திரைப் பாடல்கள் எனக்கு பெரும் மோகமாக மாறிவிட்டிருந்த காலம் அது. புத்தம்புதிய பாடல்களைக் கேட்க பாட்டுக் கடைகளுக்கு முன்னால் சென்று நிற்பேன். கேட்கும் பாடல்களை மனப்பாடம் பண்ணிப் பாடித்திரிவேன். அதைக்கேட்ட சிலர் எங்கள் ஊரில் நிகழ்ந்த சில சிறு நிகழ்ச்சிகளில் பாட அழைத்தார்கள். பின்னர் தூரத்து ஊர்களிலிருந்தும் சில அழைப்புகள் வரத் தொடங்கின . டி எம் எஸ் , மலேசியா வாசுதேவன் , எஸ் பி பி ஆகியோர் பாடிய தாளவேகம் கொண்ட பாடல்களை மட்டுமே பாடுவேன். ஆர் டி பர்மன் , பப்பி லஹிரி போன்றவர்கள் இசையமைத்து , அவர்களே பாடிய துள்ளலான சில ஹிந்திப் பாடல்களையும் பாடுவேன். மெதுவான மெல்லிசைப் பாடல்களைப் பாடினால் இந்த அரைகுறைப் பாடகனின் சாயம் வெளுத்து போகும் . தமிழர்கள் அதிகமாக வாழும் ஏலத்தோட்டப் பகுதி மயிலாடும்பாறை. அங்கே சென்று தமிழ் ஆட்களுக்கு முன்னால் தமிழ் பாடல்களைப் பாடுவதை யோசித்தபோதே எனக்குக்