முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 11, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முள்ளரும்பு மரங்கள் - பகுதி 1

முள்ளரும்பு மரங்களின் முழுப்பெயர் முள்ளரும்புக் கூம்பு தேவதாரு அல்லது ப்ரிசில்கான் பைன் . மிகக் கடுமையான வானிலைச் சூழல்களில் வளரும் மரங்கள் இவை. மழையே பெய்யாமல் , ஒன்றும் விளையாமல் வறண்டுலர்ந்த குத்துயர மலைப்பாறைப் பகுதிகளில் இவை வளர்கின்றன. வெள்ளைச் சுண்ணாம்பு கற்களின்மேல் வேரூன்றி அணுவணுவாக , நூற்றாண்டுகளினூடாகத் தலை நிமிர்த்துகின்றன. ஒருபோதும் பசுமை மாறாத இந்த ஊசியிலை மரத்தின் வாழ்நாள் சாதாரணமாக 5000 - 6000 ஆண்டுகள்! அதாவது உலகின் மிகவும் பழமையானதும் இன்றும் உயிருடனிருப்பதுமான ஒரேயொரு உயிரினம் முள்ளரும்பு மரங்கள்.  இந்த அதிசய மரத்தின் கன்றுகள் பல நூற்றாண்டுகாலம் புதிதாக முளைப்பதில்லை! இளஞ்செடிகள் துளிர்விட்டு இனப்பெருக்கம் நடப்பது ஆயிரம் ஆண்டுகளில் எப்பொழுதோ ஓரிருமுறை! மிகவும் மந்தமாகத்தான் இம்மரத்தின் வளர்ச்சி. ஆனால் இதன் இலைகளும் அரும்புகளும் ஐம்பதாண்டுகளுக்கும் மேல் உதிராமல் பசுமையுடன் நீடித்து நிற்பவை. நில்லாமல் வீசும் காற்றுகளாலேயோ சுட்டெரிக்கும் வெய்யிலாலேயோ உறைத்து ஊறவைக்கும் கடும் பனியினாலேயோ முள்ளரும்பு மரங்களை எதுவும் செய்துவிட முடியாது. விலங்குகளோ கிருமிகீடங்களோ மரத்த