இலைகள் மரப்பட்டை விலங்குத் தோல் பருத்தி இழை செயற்கை இழை.... தடித்த எழுத்துக்களில் வேறு வேறு வண்ணங்களில் எழுதி மகளிடம் கொடுத்தேன். “இது போதுமா அப்பா ? ” என்று சந்தேகமாகக் கேட்டாள். “அது இவ்வளவுதான்டா செல்லம்” என்றேன். மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்த கீதிப் பாப்பாவின் முகம் வாடிப்போயிருந்தது! “என்னடா ஆச்சு ? ” “நேஹா , தியா , நித்தியா , மாதவ் , அசுவின்.. அல்லாரும் நெறய பேஜில கலர் போட்டோ அல்லாம் ஒட்டி வெச்சு எடுத்தினு வந்தாங்க. அவங்களுக்கல்லாம் மிஸ் அஞ்சு ஸ்டார் தந்தாங்க.. என்னோட புக்கப் பாருங்க!”. நான் அவளது வீட்டுப்பாடப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தேன். நட்சத்திரங்கள் எதுவுமில்லை! மேலும் எல்லாமே தவறு என்பதுபோல் வெட்டியும் போட்டிருக்கிறார் வாத்தியாரம்மா! மனிதன் அணியும் உடைகளின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி எழுதத்தானே கேட்டிருந்தார்! அடுத்தநாள் பள்ளிக்கு மகளை அழைத்து வரச் சென்றபோது என்ன நடந்தது என்று தெளிந்து விட்டது. வண்ணப்படங்களை ஒட்டி , விரிவான அட்டவணைகளைப் போல் தயாரித்த பல பக்கங்களில் மனித உடைகளின் வரலாற்றை விரிவாக விளக்கியிருந்தனர் பெரு