முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பாட்டுக்கு நான் பாடுபட்டேன்...

முள்ளரும்பு மரங்கள் – 4 ஓவியங்கள் : ரவி பேலெட்   மயிலாடும்பாறை ஊரில் ஒரு பெரிய   இசை   நிகழ்ச்சி .   அதில் தமிழ் பாடல்களைப் பாட என்னை   அழைத்திருந்தார்கள் .   தமிழ் ,   ஹிந்தித் திரைப் பாடல்கள் எனக்கு பெரும் மோகமாக மாறிவிட்டிருந்த காலம் அது.   புத்தம்புதிய பாடல்களைக் கேட்க பாட்டுக் கடைகளுக்கு முன்னால் சென்று நிற்பேன். கேட்கும் பாடல்களை மனப்பாடம் பண்ணிப் பாடித்திரிவேன். அதைக்கேட்ட சிலர் எங்கள் ஊரில் நிகழ்ந்த சில   சிறு   நிகழ்ச்சிகளில் பாட அழைத்தார்கள்.   பின்னர்   தூரத்து ஊர்களிலிருந்தும்   சில   அழைப்புகள் வரத் தொடங்கின .   டி எம் எஸ் ,   மலேசியா வாசுதேவன் ,   எஸ் பி பி ஆகியோர் பாடிய தாளவேகம் கொண்ட பாடல்களை மட்டுமே   பாடுவேன். ஆர் டி பர்மன் ,   பப்பி லஹிரி போன்றவர்கள் இசையமைத்து ,   அவர்களே   பாடிய   துள்ளலான சில   ஹிந்திப் பாடல்களையும் பாடுவேன். மெதுவான   மெல்லிசைப் பாடல்களைப் பாடினால்   இந்த   அரைகுறைப் பாடகனின் சாயம் வெளுத்து போகும் .  தமிழர்கள் அதிகமாக வாழும் ஏலத்தோட்டப் பகுதி   மயிலாடும்பாறை.   அங்கே சென்று   தமிழ் ஆட்களுக்கு முன்னால் தமிழ் பாடல்களைப் பாடுவதை யோசித்தபோதே எனக்குக்

பாடகனின் மறைவு

192 5 காலகட்டம். ஒலி வாங்கிகளோ ஒலி பெருக்கிகளோ ஒலிப்பதிவு தொழில்நுட்பங்களோ இல்லை. துல்லியமான கர்நாடக இசையில் ,  கமாஜ் ராகத்தில்   ’காமி சத்தியபாமா கதவைத்திறவாய்’   என்று உச்சஸ்தாயியில் பாடிக்கொண்டு மேடையில் நடிக்கிறார் எஸ். ஜி. கிட்டப்பா. அவர் ஒரு மரபிசைப் பாடகர். ஆழ்ந்த இசைஞானமும் ஆன்மா ததும்பும் பாடும்முறையும் கொண்டவர். ஆனால் தன்னை ஒரு நடிகராகத்தான் அவர் முன்வைக்கிறார்! இசைஞானமும் பாடும் திறனும் மேடையில் தோன்றி நடிப்பதற்கான அடிப்படைத்   தகுதி மட்டுமே அவருக்கு! நவீன தொழில்நுட்பத்தின் எந்தவொரு உதவியுமில்லாமல் இங்கு இயங்கிய கடைசிப்   பாடக நடிகர் அவர். ஒலித் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டக் குதிப்பான பேசும் திரைப்படங்களின் வருகைக்கு முன்னரே அவர் இறந்துபோனார். 1930களில் ஒலியுள்ள திரைப்படங்கள் வந்தபோதும் இசைஞானிகளான பாகவதர்கள்தாம் நடிகர்களாகத் தோன்றினார்கள். ஒவ்வொரு திரைப்படத்திலும் எண்ணற்ற பாடல்கள். முக்கால் பங்கு வசனங்களும் பாடல்களே! பி யூ சின்னப்பா பாகவதர் வந்தார் , எம் கே தியாகராஜ பாகவதர் வந்தார். பெயரில் பாகவதர் என்று இல்லை என்றாலும் சி எஸ் ஜெயராமனும் டி ஆர் மகாலிங்கமும் ஜி என் பாலசுப