முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிரியாவிடை பிரதாப்!

அன்புள்ள பிரதாப் போத்தன் , எனக்கு பத்து வயதிருக்கும்போதுதான் நீங்கள் நடித்த முதல் திரைப்படம் ‘ஆரவம்’ வெளியானது. சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் அந்த அதிசயப் படத்தைப் பார்த்தேன். ஆனால் தங்களது இரண்டாவது திரைப்படம் ‘தகரா’ வெளியான காலத்திலேயே பார்த்து விட்டேன். வயது வந்தவர்களுக்கு மட்டுமான அப்படத்தைப் பார்க்கும்போது எனக்குப் பதினோரு வயது! உங்களிடம் ஒருமுறை இதைச் சொன்னபோது ‘ பதினைந்து வயது மட்டுமேயிருந்த அப்படத்தின் கதாநாயகி சுரேகாவுக்கே படம் பார்க்க அனுமதி கிடைத்திருக்காதே ’ என்று அந்தப் பல்தெரியாச் சிரிப்பைச் சிரித்தீர்கள். அக்காலகட்டத்தின் ஓர் ஒழுக்க நடுக்கமாகவே மாறிய சுரேகாவின் காமக்கிளரச்சியூட்டும் காட்சிகளை விட நீங்கள் நடித்த மூளை வளர்ச்சி குன்றிய , அழுக்கனான கிராமத்து இளைஞன்தான் என்னைக் கவர்ந்தான் என்று உங்களிடம் சொன்னபோது ‘அது பொய்’ என்று சொல்லி மீண்டும் சிரித்தீர்கள். அப்பாத்திரத்தில் வந்தது நீங்களா என்று வியக்க வைக்குமளவில் இருந்தது , அதற்கு ஓரிரு மாதங்களில் வெளியான உங்களது முதல் தமிழ்ப்படம் ‘அழியாத கோலங்க’ளின் பாத்திரம். அவன் ஒரு நவநாகரீக இளைஞன். நீலவண்ண டெனிம் ஜீன்ஸ் , பெல் ப
சமீபத்திய இடுகைகள்

தமிழ்தான் மலையாளிகள் கற்க வேண்டிய மொழி

எழுதியவைர் மலையாள எழுத்தாளர்  சிஹாபுதீன் பொய்த்தும்கடவு தமிழாக்கம்  ஷாஜி சென்  மலையாளம் மற்றும் ஆங்கிலத்திற்கு அடுத்து கேரளப் பள்ளிகளில் முதன்மையான பயிற்று மொழியாக தமிழ்தான் இருக்க வேண்டும். கேரளாவின் கடந்தகாலக் கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் துணை உணர்வு என்பது தமிழ் மொழிதான். நமது மொழியியல் அடையாளங்கள் மற்ற எந்த மொழியையும் விட தமிழில்தான் உள்ளது. வட இந்தியாவிலிருந்து வெடித்த ஆரியமாக்கலை அற்புதமாக எதிர்த்து நின்ற மொழி தமிழ் மட்டும்தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மலையாளம் , தமிழ் , கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் தமிழ் மட்டும் தன்னிச்சையாகவே சமஸ்கிருதக் கூறுகளை ஒதுக்கி வைத்திருப்பதைக் காணலாம். தமிழின் தொன்மையும் அம்மொழியில் தொன்றுதொட்டே உருவாகியிருக்கும் ஒப்பிலா இலக்கியங்களும் அம்மண்ணின் இரு முக்கிய அடையாளங்களாகவும் அரசியல் உந்து சக்தியாகவும் இன்றும் இருக்கின்றன. சொற்களின் செல்வத்திலும் அவற்றின் இசைத் தன்மையிலும் உலகில் உள்ள பல பிரபல மொழிகளை விட தமிழ் முன்னணியிலேயே  உள்ளது. எந்தவொரு புதிய ஆங்கிலச் சொல்லுக்கும் இணையான வார்த்தைகள் தமிழில் உடனடியாக உருவாவதை நாம் காணலாம

அப்பாவின் வளர்ப்பு நாய்கள்

பால்யத்தில் ஒருமுறை நானும் என் தம்பியும் எங்கள் எருமைமேல் ஏறி சவாரி செய்தோம். அதற்கு முன்பும் எருமைகளின் மேலேறி சவாரி செய்ய நான் முயன்றிருக்கிறேன். ஒருசில எருமைகள் எதிர்ப்பு இல்லாமல் ஒத்துழைக்கும். ஆனால் பெரும்பாலான எருமைகள் அவற்றின் மீது ஏறவே அனுமதிக்காது. கஷ்டப்பட்டு ஏறினாலும் அடுத்த கணமே நம்மைக் குலுக்கி நிலைகுலைத்து கீழே விழவைக்கும். இந்த எருமை பாவம். ஒத்துழைத்தாள். அவளை மேய்ச்சலுக்காக வெளியே கொண்டுசென்றபோது அந்தப் புல்வெளியில் கொஞ்சநேரம் அவள் மீது ஏறி சுற்றி வந்தேன். அப்போதுதான் அந்த சிறந்த யோசனை என் மண்டையில் உதித்தது. எருமைமேல் ஏறி பொதுச் சாலையினூடாக வீடுவரைக்கும் போனால் எப்படி இருக்கும்? பாவம் என் தம்பி எவ்வளவு நேரம்தான் எருமையின் பின்னால் நடந்தே வருவான் ? அவனையும் ஏற்றிடலாம். அவனுக்கு அதில் எந்த ஆர்வமும் இருக்கவில்லை. ஆனால் நான் கட்டாயப்படுத்தினேன். குதிரையின் நடத்தும் கயிற்றினைப்போல் எருமைக் கயிற்றை இழுத்துப் பிடித்தேன். ' டொக்குட டொக்குட டொக்குட டொக்குட ' என்று வாயால் குதிரைக் குளம்படி ஒலியை எழுப்பியபடி வேகமாக ஓட எருமையை தள்ளித் தள்ளி விட்டேன். பின்னால் அமர்ந்திருந

ச ரி க ம தெரியாத இசை மாமேதை : கே ஜே ஜாய்

முறையான இசைப் பயிற்சி இல்லாதவர் , ஸ்வர ஸ்தானங்கள் அறியாதவர் , ராகங்களை  அடையாளங்காணத் தெரியாதவர், இசைக் குறிப்புகளை எழுதவோ படிக்கவோ தெரியாதவர், பாடும் திறன் அறவே இல்லாதவர் என்று அடுக்கிக்கொண்டே போகுமளவில் ‘இசையறிவு’ இல்லாமலிருந்தவர் கே ஜே ஜாய். ஆனால் எனது வாழ்நாளில் நான் நேரடியாகச் சந்தித்துப் பழகிய இசையமைப்பாளர்களில், இசைக் கலைஞர்களில் மனித சாத்தியமற்றது என்றே சொல்லக்கூடிய இசைத்திறன் படைத்திருந்தவர் அவர் ஒருவரே. அக்கார்டியன் , மின்னிசை கீபோர்ட் , ஹார்மோனியம் ஆகிய கருவிகளை இசைக்கும் ஒரு முன்னணிக் கருவியிசைக் கலைஞராக 1965 முதல் தென்னிந்தியத் திரையிசையில் கோலோச்சிய கே ஜே ஜாய் 1975 ல் ஓர் இசையமைப்பாளராக மலையாளத் திரையிசையில் நுழைந்தார். தொடர்ந்துவந்த பத்தாண்டுகளில் மலையாளத் திரையிசையின் முகத்தையே மாற்றியமைத்தார். இசை கே ஜே ஜாய் என்றால் அப்பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்குமளவில் பிரபலமாகும் என்பது உறுதியாக இருந்தது அக்காலத்தில். எங்களது விவசாய மலைக் கிராமங்களில் இஞ்சி , கப்பை , நெல் போன்றவற்றைப் பயிரிட்டு வேலை செய்யும் பெண்களும் ஆண்களும் வேலையின் அலுப்பையும் அயர்ச்சியையும் மறக்க கே