இடுகைகள்

குரு தத் எனும் துயர்காவியத் தலைவன்

“ உயிருட னி ருக்கும் மனித ர்களை உள்ளங்கால் கீழில் மிதித்து நசுக்கி, இறந் துபோன வர்களை வழிபடும் உங்கள் நாகரீகத்தை, கலாச்சாரத்தை நான் வெறுக்கிறேன் , கண்டிக்கிறேன் ”. என்று சொன்னவர் குரு தத். ஆனால் தனது வாழ்நாளிலும் தான் இறந்த பிறகும் அந்தக் கலாச்சாரத்தையே சந்திக்க நேர்ந்தவர் அவர். தனது முப்பத்தொன்பதாவது வயதில் அவர் இறந்து போனபின் கிட்டத்தட்ட இரண்டு பதிற்றாண்டுகள் குரு தத் பற்றி ய பெரிய உரையாடல்களோ ஆய்வுகளோ விவாதங்களோ எதுவுமே இங்கே நிகழவில்லை. ஆனால் 1980 க ளிலிருந்து இந்தியாவிலும் உலகம் முழுவதும் ஒரு கதைக் காவிய நாயகனாகவே மாறி விட்டார் குரு தத். எட்டு படங்களை த்தான் இயக்கினார் என்றாலும் இன்று உலக சினிமா விலேயே மதிக்கப்படும் ஓர் இயக்குநர் அவர். பத்துக்கும் மேலான மொழிகளில் அவரைப் பற்றி குறைந்தது நானூறு புத்தகங்களாவது வெளிவந்திருக்கும் என நினைக்கிறேன். இருபதுக்கும் மேலான குரு தத் ஆவணப் படங்களை பார்த்திருக்கிறேன். அவற்றுக்குள் பதிவு செய்யப்படாத எதையுமே புதிதாக நாம் குரு தத் பற்றி இங்கே எழுதிவிட முடியாது. இருந்தும் அவரைப்பற்றி மீண்டும் உரையாடுகிறோம். காரணம் குரு தத்துக்கு நிகரான இன்னொரு ...
சமீபத்திய இடுகைகள்