முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்தான் மலையாளிகள் கற்க வேண்டிய மொழி

எழுதியவைர் மலையாள எழுத்தாளர்  சிஹாபுதீன் பொய்த்தும்கடவு தமிழாக்கம்  ஷாஜி சென்  மலையாளம் மற்றும் ஆங்கிலத்திற்கு அடுத்து கேரளப் பள்ளிகளில் முதன்மையான பயிற்று மொழியாக தமிழ்தான் இருக்க வேண்டும். கேரளாவின் கடந்தகாலக் கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் துணை உணர்வு என்பது தமிழ் மொழிதான். நமது மொழியியல் அடையாளங்கள் மற்ற எந்த மொழியையும் விட தமிழில்தான் உள்ளது. வட இந்தியாவிலிருந்து வெடித்த ஆரியமாக்கலை அற்புதமாக எதிர்த்து நின்ற மொழி தமிழ் மட்டும்தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மலையாளம் , தமிழ் , கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் தமிழ் மட்டும் தன்னிச்சையாகவே சமஸ்கிருதக் கூறுகளை ஒதுக்கி வைத்திருப்பதைக் காணலாம். தமிழின் தொன்மையும் அம்மொழியில் தொன்றுதொட்டே உருவாகியிருக்கும் ஒப்பிலா இலக்கியங்களும் அம்மண்ணின் இரு முக்கிய அடையாளங்களாகவும் அரசியல் உந்து சக்தியாகவும் இன்றும் இருக்கின்றன. சொற்களின் செல்வத்திலும் அவற்றின் இசைத் தன்மையிலும் உலகில் உள்ள பல பிரபல மொழிகளை விட தமிழ் முன்னணியிலேயே  உள்ளது. எந்தவொரு புதிய ஆங்கிலச் சொல்லுக்கும் இணையான வார்த்தைகள் தமிழில் உடனடியாக உருவாவதை நாம் காணலாம

அப்பாவின் வளர்ப்பு நாய்கள்

பால்யத்தில் ஒருமுறை நானும் என் தம்பியும் எங்கள் எருமைமேல் ஏறி சவாரி செய்தோம். அதற்கு முன்பும் எருமைகளின் மேலேறி சவாரி செய்ய நான் முயன்றிருக்கிறேன். ஒருசில எருமைகள் எதிர்ப்பு இல்லாமல் ஒத்துழைக்கும். ஆனால் பெரும்பாலான எருமைகள் அவற்றின் மீது ஏறவே அனுமதிக்காது. கஷ்டப்பட்டு ஏறினாலும் அடுத்த கணமே நம்மைக் குலுக்கி நிலைகுலைத்து கீழே விழவைக்கும். இந்த எருமை பாவம். ஒத்துழைத்தாள். அவளை மேய்ச்சலுக்காக வெளியே கொண்டுசென்றபோது அந்தப் புல்வெளியில் கொஞ்சநேரம் அவள் மீது ஏறி சுற்றி வந்தேன். அப்போதுதான் அந்த சிறந்த யோசனை என் மண்டையில் உதித்தது. எருமைமேல் ஏறி பொதுச் சாலையினூடாக வீடுவரைக்கும் போனால் எப்படி இருக்கும்? பாவம் என் தம்பி எவ்வளவு நேரம்தான் எருமையின் பின்னால் நடந்தே வருவான் ? அவனையும் ஏற்றிடலாம். அவனுக்கு அதில் எந்த ஆர்வமும் இருக்கவில்லை. ஆனால் நான் கட்டாயப்படுத்தினேன். குதிரையின் நடத்தும் கயிற்றினைப்போல் எருமைக் கயிற்றை இழுத்துப் பிடித்தேன். ' டொக்குட டொக்குட டொக்குட டொக்குட ' என்று வாயால் குதிரைக் குளம்படி ஒலியை எழுப்பியபடி வேகமாக ஓட எருமையை தள்ளித் தள்ளி விட்டேன். பின்னால் அமர்ந்திருந