திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் புன்னப்ரா, வயலார் பகுதிகளில் தென்னை நாரிலிருந்து கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்த அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தினக்கூலி ஒருவேளை உணவிற்கு கூட பற்றாமலிருந்தது. எதிர்த்து நின்று போராடுவத ற்கோ தட்டிக் கேட்பத ற்கோ எந்த சக்தியும் இல்லாமலிருந்த அம்மக்களைத் தமது உணவிற்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுவோம் என்ற மன நிலைக்கு எழுப்பி ஒரு போராட்டத்தைத் துவங்கிவைத்தது அப்போது அங்கு துளிர்விட்டுக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் அமைப்பு. வெகுவிரைவில் ஒரு பெரும் அலையாக அப்போராட்டம் மாறியது. கேரளத்தில் மக்களிடம் வரவேற்பு பெற்று இன் று வரைக்கும் ஆட்சியில் இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்கப் புள்ளி இதுதான் . 1946ல் நிகழ்ந்த புன்னப்ரா - வயலார் மக்கள் எழுச்சி. பிரட்டீஷாரின் உதவியுடன் இயங்கிக் கொண்டிருந்த திருவிதாம்கூர் அரசரின் திவான் சி பி ராமசாமி ஐயர் போலீசாரையும் ராணுவத்தையும் பயன்படுத்தி அம்மக்களுக்கு எதிராக போர் தொடுத்தார். உயர்ரக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு ராணுவம் அம்மக்கள