முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ரித்விக் கட்டக் : இந்திய மாற்று சினிமாவின் வானுயரம்

ரித்விக் கட்டக் பிறந்து தொண்ணூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இதையொட்டி ரிக்விக் கட்டக்கின் மனைவி ஷுரரமா கட்டக் மற்றும் அவரது மகள் சம்ஹிதா கட்டக் தலைமையிலான ரித்விக் கட்டக் நினைவு அறக்கட்டளையும் சினி சென்ட்ரல் கல்கத்தா என்ற திரைப்பட அமைப்பும் இணைந்து கட்டக்கின் தொண்ணூறாவது பிறந்த நாளான நவம்பர் 4 , 2015 அன்று கல்கத்தாவில் ஒரு மாபெரும் விழாவை எடுத்தார்கள். அவ்விழாவின் பிரதான உரையை தமிழ் எழுத்தாளரும் விமர்சகரும் நடிகருமான ஷாஜி நிகழ்த்தினார். அந்த ஆங்கில உரையின் தமிழாக்கம் இது. சென்னையிலிருந்து வருகிறேன். வங்காளத்தில் இன்று எப்படியென்று எனக்குத் தெரியவில்லை ஆனால் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ், மலையாளத் திரையுலகில் கலைப் படங்கள் மற்றும் மாற்றுச் சினிமாவை நேசிப்பவர்களின் நடுவே தவிர்க்க முடியாத ஒரு தொன்மை நாயகனாக என்றுமே இருக்கிறார் ரித்விக் கட்டக். மலையாளத்திலும் தமிழிலும் அவரைப்பற்றி பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அவர் எழுதிய புத்தகங்களின் மொழிபெயர்ப்புகள், அவரது வாழ்க்கை வரலாறு என அவரது கலையையும் வாழ்க்கையையும் பற்றியான பல ஆக்கங்கள் தென்னிந்திய மொழிகளில் இருக்கின்றன. அவரைப் பற்றி நாங்

பின்னணிப் பாடகனின் மரணம்

ஒவ்யூர் அருங்கா பதினேழாவது வயதில் தனது வீட்டின் சுவரை அடித்து உடைத்தார்! வீட்டின் முக்கியமான தாங்குச் சுவர். வீடே கிட்டத்தட்ட சரிந்தது. தாய் தந்தையினர் திரும்பிவந்தபோது நிலநடுக்கத்தில் சிக்கியதுபோல் அந்த வீடு காட்சியளித்தது. என்ன நடந்தது என்ற கேள்விக்கு தனது ட்ரம்பெட்டின்   (Trumpet)  ஒலி அந்தச்   சுவரில் இடித்து எதிரொலித்து முழங்கி இசையை தெளிவற்றதும் நாராசமானதும் ஆக்குவதால்   வேறு வழியில்லாமல் உடைத்தேன் என்றுச்   சாதாரணமாகச் சொன்னார்! வீட்டைச் சரிசெய்து அதில் முறையான ஒலி தடுப்பான்கள் அமைத்த ஒரு அறையை கட்டிக்கொடுக்கும் கட்டாயத்திற்கு ஆளாகினார்கள் ஒவ்யூரின் தாய் தந்தையினர். ஒவ்யூர் அருங்கா   இன்று கென்யாவின் மிக முக்கியமான, உலகப்புகழ் பெற்ற ட்ரம்பெட் கருவியிசைக் கலைஞர். இசைக்கும் தொழில்நுட்பத்திற்கும் சம்பந்தமேயில்லை என்கிறார்கள் சில இசை நிபுணர்கள். இசை வியாபாரத்திற்கு தொழில்நுட்பம் தேவை ஆனால் இசைக்கு அது அறவே தேவையில்லை என்கிறார்கள். இந்தக் கருத்து சரியா, என்ன? ஒரு இசைக்கலைஞன் இசைக்கும் இசையின் தரம் ஒன்றுதான் என்றாலும் அதன் தொனியும் தரமும் அந்த இசை ஒலிக்கும் இடத்திற்கு தகுந்ததுபோல் ம

இங்கல்பெர்ட் ஹம்பெர்டின்க் : சென்னையில் பிறந்த சர்வதேச இசை நட்சத்திரம்

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஊரடங்குச் சட்டமும் (Curfew) அதோடு மதுவிலக்கும்தான் ஹைதராபாத் நகரின் சிக்கலான சமூகப் பிரச்சினைகளாக இருந்தன! அப்போது நான் அங்கே ஒரு மேற்கத்திய இசைக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். அக்குழுவின் பெயர் ‘கர்ஃப்யூ!'. திடீரென்று எங்கும் மது இல்லாமலாயிற்று. ஆகவே களியாட்டங்கள் இல்லை, விளைவாக மேலையிசைக்கும் வாய்ப்புகள் இல்லாமலாயின. எங்கள் குழு அனேகமாக கலைந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் கடுமையாக உழைத்து ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை இசைமயமாக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அதிக நாளில்லை. சிதறிப்போன இசைக்கலைஞர்களைத் திரட்டி மீண்டும் இசைக்குழுவை ஒருங்கிணைக்க வேண்டும். ஒருவழியாக எல்லோரும் சிக்கினார்கள். முக்கியப் பாடகர் மாரியோவைத் தவிர. அவன் இல்லாவிட்டால் இசைக்குழுவே இல்லை! ஆள் எங்கே போனாரென்று எந்தத் தகவலும் இல்லை. சிலர் சொன்னார்கள், மது கிடைக்காமல் அவன் மாநிலத்தைவிட்டே சென்றிருக்கக்கூடும் என்று. கடுமையான தேடலுக்குப் பின் அவன் கர்நாடக மாநிலத்தில் பிதர் என்ற ஊரில் இருப்பதாகத் தெரியவந்தது. அங்கே ஒரு ஆங்கிலப் பள்ளியில் இசை ஆசிரியராக வேலைபார்த்தான்