முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பில்லி எனும் பேரழகியின் வாழ்க்கை

எங்கே பிறந்தாள் என்று தெரியவில்லை. கைக்குட்டிப் பருவத்திலேயே தாமிரபரணிக் கரையிலுள்ள சேரன்மகாதேவி ஊரின் ஒரு குடும்பம் அவளை வாங்கி வளர்த்தது. அவர்கள் அவளுக்கு வைத்த பெயர் பைரவி. அதைத் தவிர ஒருவயது வரைக்குமான அவளது வாழ்க்கை எப்படி இருந்தது என்று யாருக்கும் வெளிச்சமில்லை. ஒரு வயதானதும் அவர்கள் அவளை ஒரு நாய் வியாபாரிக்கு விற்றார்கள். அந்த வியாபாரி அவளை எனது நண்பரும் இயற்கை விவசாயியுமான ஃ பெலிக்ஸிற்கு விலைபேசி விற்றார். பல இனத்திலான நாய்களை வளர்த்து இனவிருத்தி செய்து விற்பதும் தனது விவசாயத்தின் ஒருபகுதியாக ச்   செய்து வந்தார் ஃ பெலிக்ஸ் . தன்னிடம் வந்து சேர்ந்த அழகான அந்த லாப்ரடார் பெண் நாய்க்கு அவர் ‘பெல்லி’ என்று பெயர் வைத்தார். பைரவியிலிருந்து பெல்லியாக மாற அவளுக்கு அதிகநாள் தேவைப்படவில்லை.  தடுப்பூசி போட அவளை ப் பக்கத்திலுள்ள சிறு நகரத்திற்கு க் கொண்டு ச் சென்றார்  ஃ பெலிக்ஸ் . அத்தகைய ஒரு சூழலையோ ஆள் கூட்டத்தையே அதுவரைக்கும் பார்த்திராத பெல்லி அவரது கையிலிருந்து தப்பித்து ஓடிவிட்டாள். முதலில் ஒரு ஆட்டோ ரிட்சாவில் ஏறி அமர்ந்தாள். பின் அங்கிருந்து இறங்கியோடி ஒரு மோட்டார் பைக் பயணி

ரித்விக் கட்டக் : இந்திய மாற்று சினிமாவின் வானுயரம்

ரித்விக் கட்டக் பிறந்து தொண்ணூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இதையொட்டி ரிக்விக் கட்டக்கின் மனைவி ஷுரரமா கட்டக் மற்றும் அவரது மகள் சம்ஹிதா கட்டக் தலைமையிலான ரித்விக் கட்டக் நினைவு அறக்கட்டளையும் சினி சென்ட்ரல் கல்கத்தா என்ற திரைப்பட அமைப்பும் இணைந்து கட்டக்கின் தொண்ணூறாவது பிறந்த நாளான நவம்பர் 4 , 2015 அன்று கல்கத்தாவில் ஒரு மாபெரும் விழாவை எடுத்தார்கள். அவ்விழாவின் பிரதான உரையை தமிழ் எழுத்தாளரும் விமர்சகரும் நடிகருமான ஷாஜி நிகழ்த்தினார். அந்த ஆங்கில உரையின் தமிழாக்கம் இது. சென்னையிலிருந்து வருகிறேன். வங்காளத்தில் இன்று எப்படியென்று எனக்குத் தெரியவில்லை ஆனால் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ், மலையாளத் திரையுலகில் கலைப் படங்கள் மற்றும் மாற்றுச் சினிமாவை நேசிப்பவர்களின் நடுவே தவிர்க்க முடியாத ஒரு தொன்மை நாயகனாக என்றுமே இருக்கிறார் ரித்விக் கட்டக். மலையாளத்திலும் தமிழிலும் அவரைப்பற்றி பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அவர் எழுதிய புத்தகங்களின் மொழிபெயர்ப்புகள், அவரது வாழ்க்கை வரலாறு என அவரது கலையையும் வாழ்க்கையையும் பற்றியான பல ஆக்கங்கள் தென்னிந்திய மொழிகளில் இருக்கின்றன. அவரைப் பற்றி நாங்

பின்னணிப் பாடகனின் மரணம்

ஒவ்யூர் அருங்கா பதினேழாவது வயதில் தனது வீட்டின் சுவரை அடித்து உடைத்தார்! வீட்டின் முக்கியமான தாங்குச் சுவர். வீடே கிட்டத்தட்ட சரிந்தது. தாய் தந்தையினர் திரும்பிவந்தபோது நிலநடுக்கத்தில் சிக்கியதுபோல் அந்த வீடு காட்சியளித்தது. என்ன நடந்தது என்ற கேள்விக்கு தனது ட்ரம்பெட்டின்   (Trumpet)  ஒலி அந்தச்   சுவரில் இடித்து எதிரொலித்து முழங்கி இசையை தெளிவற்றதும் நாராசமானதும் ஆக்குவதால்   வேறு வழியில்லாமல் உடைத்தேன் என்றுச்   சாதாரணமாகச் சொன்னார்! வீட்டைச் சரிசெய்து அதில் முறையான ஒலி தடுப்பான்கள் அமைத்த ஒரு அறையை கட்டிக்கொடுக்கும் கட்டாயத்திற்கு ஆளாகினார்கள் ஒவ்யூரின் தாய் தந்தையினர். ஒவ்யூர் அருங்கா   இன்று கென்யாவின் மிக முக்கியமான, உலகப்புகழ் பெற்ற ட்ரம்பெட் கருவியிசைக் கலைஞர். இசைக்கும் தொழில்நுட்பத்திற்கும் சம்பந்தமேயில்லை என்கிறார்கள் சில இசை நிபுணர்கள். இசை வியாபாரத்திற்கு தொழில்நுட்பம் தேவை ஆனால் இசைக்கு அது அறவே தேவையில்லை என்கிறார்கள். இந்தக் கருத்து சரியா, என்ன? ஒரு இசைக்கலைஞன் இசைக்கும் இசையின் தரம் ஒன்றுதான் என்றாலும் அதன் தொனியும் தரமும் அந்த இசை ஒலிக்கும் இடத்திற்கு தகுந்ததுபோல் ம