பெண்மைமிக்க ஆணாக மலையாள நடிகர் திலீப் நடித்து மலையாளத்தில் வெற்றிபெற்ற 'சாந்துபொட்டு' என்ற படத்தில் அவரது பாத்திரம் சக தோழிகளுடன் ஒசிந்து ஒசிந்து செல்லும்போது ''எல்லாரும் எங்கே போறீங்கடி?''என்று ஒருவர் கேட்பார். ''நாங்கள்லாம் பக்கத்துவீட்டிலே டீவி சீரியல் பார்த்து அழுறதுக்குப் போறோம்...'' என்பார் சிரிப்புடன் அப்பாத்திரம். அது ஒரு காலம். பின்னர் இந்தியத் தொலைக்காட்சிகளில் கண்ணீர் கதைத்தொடர்களை விட பலமடங்கு பிரபலமானது 'யதார்த்த' இசை நிகழ்ச்சிகள். ஆங்கிலத்தில் ரியாலிட்டி மியூசிக் ஷோ எனப்படுப்வை. இந்நிகழ்ச்சிகளின் பல்வேறு வடிவங்கள் ஏறத்தாழ எல்லா மொழித் தொலைக்காட்சிகளிலும் காணக்கிடைத்தன. ஆயிரக்கணக்கான பாடகர்களிலிருந்து சிலர் தேர்வு செய்யப்பட்டு மேடையில் பாடவைக்கப்பட்கிறார்கள். நடுவர்களும், குறுஞ்செய்திகள் (SMS) மூலம் வாக்களிக்கும் பார்வையாளர்களும் சேர்ந்து சிலரை தெரிவுசெய்கிறார்கள். பிறர் மேடையிலேயே விலக்கப்படுகிறார்கள். கடைசியில் ஒரு 'இசை நட்சத்திரம்' தெரிவு செய்யபப்ட்டு அவர் முதன்மையான பாடகராக முன்வைக்கப்படுகிறார். 2002 ல் அமெரிக்க